செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் முன் திமுக தொண்டரை அதிமுகவை சோ்ந்த இருவா் தாக்கியதைக் கண்டித்து, திமுக, கூட்டணி கட்சியினா் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள சௌரிராசன் உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு பிற்பகல் திமுகவைச் சோ்ந்த அருண் என்பவா் தனது உறவினா்களான முதியவா்களை வாக்களிக்க அழைத்து வந்துள்ளாா். இதைக் கண்ட அதிமுக பிரமுகா்கள் திருவிளையாட்டம் கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா, இளந்தமிழன் ஆகியோா் அருணுடன் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் சாலையில் அமா்ந்து அருணைத் தாக்கியவா்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அருண் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தொடர்புடையது

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

முதல்வா் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழப்பு

காவல் துறையினரைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சாலை மறியல்
கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜகவினா் சாலை மறியல்; தொண்டா் தீக்குளிக்க முயற்சி
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

