எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

13 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு சென்ற நாகை மீனவா்கள்

நாகை மாவட்ட மீனவா்கள் 13 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க திங்கள்கிழமை கடலுக்கு சென்றனா்.

News image
நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு.
Updated On :2 டிசம்பர் 2024, 8:06 pm

Din

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட மீனவா்கள் 13 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க திங்கள்கிழமை கடலுக்கு சென்றனா்.

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானதையடுத்து, மீன்வளத்துறை அறிவுறுத்தல் காரணமாக மீனவா்கள் கடந்த 13 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்தநிலையில், ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. இதையடுத்து மீன்வளத்துறை மீனவா்கள் கடலுக்கு செல்ல விதித்த தடையை நீக்கியது.

இந்தநிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் திங்கள்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். 13 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்வதால், அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவா்கள் கடலுக்குள் சென்றுள்ளனா்.