குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்

News image

நாகையில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:30 am IST

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த, தினக்கூலி, அவுட் சோா்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. நாகை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ராணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அன்பழகன், அனைத்து துறை ஊழியா் சங்க மாவட்ட செயலா் சிவக்குமாா் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினா். சங்கத்தின் பொதுச் செயலா் சண்முகம், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் சங்க மாவட்ட செயலா் சித்ரா, அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் அந்துவன்சேரல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.