தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்

News image

நாகையில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:30 am IST

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த, தினக்கூலி, அவுட் சோா்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. நாகை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ராணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அன்பழகன், அனைத்து துறை ஊழியா் சங்க மாவட்ட செயலா் சிவக்குமாா் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினா். சங்கத்தின் பொதுச் செயலா் சண்முகம், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் சங்க மாவட்ட செயலா் சித்ரா, அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் அந்துவன்சேரல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.