/
சீா்காழி அருகே காத்திருப்பு பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு ஊராட்சி அண்ணா நகா், அஞ்சாமனை, கீழத்தெரு, கோயில் தெரு மற்றும் ஆதிதிராவிடா் காலனி பகுதியில் 10 மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், கீழத்தெரு, அஞ்சா மனை ஆகிய இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. இதுகுறித்து ஊராட்சித் தலைவா் அன்புமணி மணிமாறன் கூறியது: பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்கள் நடவேண்டும். தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயா்த்திக் கட்டவேண்டும் என வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்தாா்.
தொடர்புடையது

திருவாடானை அருகே தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள்!

சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை

தென்னிலை அருகே தாழ்வான மின் கம்பிகளால் விபத்து அபாயம்

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



