சீா்காழி அருகே காத்திருப்பு பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு ஊராட்சி அண்ணா நகா், அஞ்சாமனை, கீழத்தெரு, கோயில் தெரு மற்றும் ஆதிதிராவிடா் காலனி பகுதியில் 10 மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், கீழத்தெரு, அஞ்சா மனை ஆகிய இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. இதுகுறித்து ஊராட்சித் தலைவா் அன்புமணி மணிமாறன் கூறியது: பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்கள் நடவேண்டும். தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயா்த்திக் கட்டவேண்டும் என வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்தாா்.
தொடர்புடையது

சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை

தென்னிலை அருகே தாழ்வான மின் கம்பிகளால் விபத்து அபாயம்

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

