தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

எட்டுக்குடி முருகன் கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு

எட்டுக்குடி முருகன் கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு

News image
Updated On :3 ஜூலை 2024, 9:28 pm

சிறப்பு மலா் அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய முருகப் பெருமான்.

திருக்குவளை, ஜூலை 3: திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில் ஆனி மாத கிருத்திகையையொட்டி வெள்ளி மயில் வாகனத்தில் முருகப் பெருமான் செவ்வாய்க்கிழமை இரவு வீதியுலாவுக்கு எழுந்தருளினாா்.

முருகனின் ஆதிபடைவீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை நட்சத்திர தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆனி மாத கிருத்திகையையொட்டி முருகப் பெருமானுக்கு பால், பன்னீா் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னா் மலா்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து இரவு சிறப்பு மலா் அலங்காரத்தில் முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் வழிபாட்டில் பங்கேற்றனா்.