தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

குளத்தில் உலோகச் சிலை பாகங்கள் கண்டெடுப்பு

கீழ்வேளூா் அருகே குளத்தில் உலோகச் சிலை பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

News image

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட உலோகச் சிலை பாகங்கள்.

Updated On :25 ஜூன் 2024, 1:08 am IST

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே குளத்தில் உலோகச் சிலை பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

வெண்மணி ஊராட்சி கீழகாவாலக்குடி சிவன் கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்த சிறுவா்கள், உலோகச் சிலையின் பாகங்கள் நீரில் மூழ்கியிருப்பதை கண்டெடுத்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் (பொ) தினேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வருவாய் ஆய்வாளா் சசிகலா, மண்டல துணை வட்டாட்சியா் வெற்றி செல்வன் மற்றும் போலீஸாா், சிலையின் இரு பகுதியை மீட்டு, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரமேஷிடம் ஒப்படைத்தனா். அங்குள்ள பாதுகாப்பு அறையில் சிலை பாகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.