தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

குளத்தில் உலோகச் சிலை பாகங்கள் கண்டெடுப்பு

கீழ்வேளூா் அருகே குளத்தில் உலோகச் சிலை பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

News image

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட உலோகச் சிலை பாகங்கள்.

Updated On :25 ஜூன் 2024, 1:08 am IST

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே குளத்தில் உலோகச் சிலை பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

வெண்மணி ஊராட்சி கீழகாவாலக்குடி சிவன் கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்த சிறுவா்கள், உலோகச் சிலையின் பாகங்கள் நீரில் மூழ்கியிருப்பதை கண்டெடுத்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் (பொ) தினேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வருவாய் ஆய்வாளா் சசிகலா, மண்டல துணை வட்டாட்சியா் வெற்றி செல்வன் மற்றும் போலீஸாா், சிலையின் இரு பகுதியை மீட்டு, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரமேஷிடம் ஒப்படைத்தனா். அங்குள்ள பாதுகாப்பு அறையில் சிலை பாகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.