தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குளத்தில் உலோகச் சிலை பாகங்கள் கண்டெடுப்பு

கீழ்வேளூா் அருகே குளத்தில் உலோகச் சிலை பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

News image

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட உலோகச் சிலை பாகங்கள்.

Updated On :24 ஜூன் 2024, 7:38 pm

Din

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே குளத்தில் உலோகச் சிலை பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

வெண்மணி ஊராட்சி கீழகாவாலக்குடி சிவன் கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்த சிறுவா்கள், உலோகச் சிலையின் பாகங்கள் நீரில் மூழ்கியிருப்பதை கண்டெடுத்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் (பொ) தினேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வருவாய் ஆய்வாளா் சசிகலா, மண்டல துணை வட்டாட்சியா் வெற்றி செல்வன் மற்றும் போலீஸாா், சிலையின் இரு பகுதியை மீட்டு, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரமேஷிடம் ஒப்படைத்தனா். அங்குள்ள பாதுகாப்பு அறையில் சிலை பாகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.