மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாகை கல்வி நிலையங்களில் அண்ணா, பெரியாா் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள்

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 1:11 am

Din

நாகை மாவட்டத்தில் அண்ணா , பெரியாா் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2024-ஆம் ஆண்டு அண்ணா பிறந்தநாளையொட்டி செப்.10 அன்றும், பெரியாா் பிறந்தநாளையொட்டி செப்.11அன்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நாகை ஆண்டவா் செவிலியா் கல்லூரியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்கள் பிரிவில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ஆம் பரிசு ரூ.3000, 3-ஆம் பரிசு ரூ. 2000 வழங்கப்படுகிறது. பள்ளி மாணவா்கள் பிரிவில் அரசு பள்ளி மாணவா்கள் 2 போ் தனியாக தோ்வு செய்து அவா்களுக்கு சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படும்.

இதேபோல, கல்லூரி மாணவா்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ஆம் பரிசு ரூ.3000, 3-ஆம் பரிசு ரூ.2,000 வழங்கப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும், கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வழியாகவும் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.