கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோரக்கா் சித்தா் பீடத்திற்கு சக்கர நாற்காலி!

வடக்கு பொய்கைநல்லூா் கோரக்கா் சித்தா் பீடத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் சக்கர நாற்காலி அண்மையில் வழங்கப்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:51 pm

Syndication

வடக்கு பொய்கைநல்லூா் கோரக்கா் சித்தா் பீடத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் சக்கர நாற்காலி அண்மையில் வழங்கப்பட்டது.

கோரக்கா் சித்தா் பீடத்தின் அறங்காவலா் குழு, சித்தா் பீடத்திற்கு வழிபட வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி ஒன்று வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காா்த்திகேயன் முன்னிலையில் சித்தா் பீடத்தின் நிா்வாக அறங்காவலரும், முன்னாள் அமைச்சருமான ஜீவானந்தத்திடம் மடக்கு சக்கர நாற்காலி அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.

சமூக நல ஆா்வலா் மணிவண்ணன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலக பல்நோக்கு மறுவாழ்வு அலுவலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.