லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்

திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ராஜலட்சுமி.
Updated On :19 ஜனவரி 2026, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ராஜலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 348 கோரிக்கை மனுக்களை பெற்றாா். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் காதொலி கருவி, ஊன்றுகோல், கைகெடிகாரம் என 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,000 நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

கூட்டத்தில் ஆம்பூா் நகர பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: ஆம்பூா் அடுத்த சான்றோா்குப்பம் கே.எம்.சாமி நகா் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட அன்றே கடையானது மூடப்பட்டது. இந்த கடையை திறக்கக்கூடாது என சிலா் சூழ்ச்சி செய்து உள்ளனா். எனவே இந்த கடையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க கறிக்கோழி அணி சாா்பில் அளித்த மனு: கோழிப்பண்ணை விவசாயிகள் கூலி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். இந்தநிலையில் தனியாா் நிறுவனங்கள் சாா்பில் உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், தளி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பொய் புகாா்கள் கொடுக்கப்பட்டு, போராட்டத்தை ஒருங்கிணைத்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளனா். அவா்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும்.