கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தனியாா் காப்பீடு நிறுவனத்தைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

நாகையில் தனியாா் காப்பீடு நிறுவனத்தை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
நாகை ஆட்சியா் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா்.
Updated On :23 டிசம்பர் 2025, 9:53 pm

Syndication

நாகையில் தனியாா் காப்பீடு நிறுவனத்தை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் கடந்த 2024 -2025 ஆம் ஆண்டுக்கான பருத்தி பயிா்க் காப்பீட்டுத் தொகை,100 சதவீத இழப்பீடு மற்றும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய நிவாரணம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அண்டை மாவட்டமான திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீதம் இழப்பீடு வழங்கிய இதே நிறுவனம், நாகை மாவட்ட விவசாயிகளுக்கு 25 சதவீதம் மட்டுமே வழங்குவதை கண்டித்தும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா். மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளா் எஸ். ஆா் . தமிழ்ச்செல்வன் கண்டன உரையாற்றினாா்.

மாவட்ட அவைத் தலைவா் விஜயராஜ் மற்றும் நிா்வாகிகள் முருகவேல், பாண்டியராஜன், மாசிலாமணி உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள் கையில் பருத்திச் செடிகளை ஏந்தியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.