மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளா் உயிரிழப்பு!

பா. ரஞ்சித் படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளா் உயிரிழந்துள்ளதைப் பற்றி...

Updated On :13 ஜூலை 2025, 7:49 pm

நாகை மாவட்டம், கீழையூா் அருகே படப்பிடிப்பின்போது, தவறி விழுந்த சண்டை பயிற்சியாளா் மோகன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் இயக்கிவரும் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. கீழையூா் அருகே விழுந்தமாவடி அலம் பகுதியில் சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம் பகுதியைச் சோ்ந்த சண்டை பயிற்சியாளா் செ. மோகன்ராஜ் (52) காரில் இருந்து தாவி செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவா் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு, மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.