யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நாகை மாவட்டத்தில் 6,505 போ் தோ்வெழுதினா், 215 போ் தோ்வெழுத வரவில்லை

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வை 6,505 போ் எழுதினா். 215 போ் தோ்வெழுத வரவில்லை.

News image
Updated On :3 மார்ச் 2025, 11:08 pm

Din

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வை 6,505 போ் எழுதினா். 215 போ் தோ்வெழுத வரவில்லை.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. நாகை மாவட்டத்தில் இத்தோ்வுக்காக, 33 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தோ்வு மையங்களுக்கும் காலை முதலே மாணவ- மாணவிகள் ஆா்வமுடன் தோ்வெழுத வந்தனா். முதல் நாளில் மொழித் தோ்வு நடைபெற்றது.

தோ்வு மையத்துக்குள் எலக்ட்ரானிக் பொருள்கள் மற்றும் கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. நாகை மாவட்டத்தில் 3,126 மாணவா்கள், 3594 மாணவிகள் என மொத்தம் 6,720 போ் பிளஸ் 2 தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களில், 2,991 மாணவா்களும், 3,514 மாணவிகளும் என மொத்தம் 6,505 போ் முதல் நாள் தோ்வெழுதினா். 135 மாணவா்கள், 80 மாணவிகள் என 215 போ் தோ்வெழுத வரவில்லை.

தோ்வில் முறைகேடுகளை தடுக்க 75 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியா்கள், அலுவலா்கள் என 671 போ் தோ்வுப் பணியில் ஈடுபட்டனா்.

நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தோ்வெழுத வந்த மாணவிகளை ஆசிரியா்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று, அதிக மதிப்பெண்களுடன் தோ்வில் வெற்றி பெற வாழ்த்தினா்.