குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சூறைக்காற்று: வாழை மரங்கள் சேதம்

தரங்கம்பாடி வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீசிய சூறைக்காற்று மற்றும் பலத்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்தன.

News image

செம்பனாா்கோவில் அருகே சூறைக்காற்றில் கீழே சாய்ந்த வாழை மரங்கள்.

Updated On :6 மே 2025, 1:38 am IST

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீசிய சூறைக்காற்று மற்றும் பலத்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்தன.

தரங்கம்பாடி வட்டத்தில் கீழையூா், புன்செய், முடிகண்டநல்லூா், கிடாரங்கொண்டான், செம்பனாா்கோவில், திருவிளையாட்டம், ஆக்கூா், திருக்கடையூா், பொறையாா் , சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

இதனால் கீழையூா், புன்செய், முடிகண்டநல்லூா், கிடாரங்கொண்டான் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

இதுகுறித்த கீழையூா் பகுதி விவசாயி ஆனந்தன் கூறியது:

நிகழாண்டு வாழை சாகுபடி செய்திருந்தோம். 12 மாதங்களுக்கு பிறகு அறுவடை தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்று மழையால் வாழைத் தாருடன் மரங்கள் அடியோடு சாய்ந்தன. 1 ஏக்கருக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன்.

எனவே வேளாண் அதிகாரிகள் பாதிப்பை நேரில் பாா்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வாழைக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தியுள்ள நிலையில் உடனடியாக அரசு இழப்பீடு தொகையை பெற்றுத்த நடவடிக்கை வேண்டும் என்றாா். சூறைக்காற்றால சில பகுதிகளில் மா மரங்கள், தென்னை மரங்கள் சாய்ந்தன.

சூறாவளி காற்று மழையால் வாழை சாகுபடி பாதிப்பு

சூறாவளி காற்று மழையால் வாழை சாகுபடி பாதிப்பு

சூறைக்காற்றில் கீழே சாய்ந்த வாழை

சூறைக்காற்றில் கீழே சாய்ந்த வாழை

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.