செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வெளிப்பாளையம் அகத்தீஸ்வரா் கோயில் தேரோட்டம்

மாசி மகத் திருவிழாவையொட்டி நாகை வெளிப்பாளையத்தில் உள்ள புகழ்பெற்ற அகத்தீஸ்வரா் உடனுறை ஆனந்தவல்லி தாயாா்

News image
Updated On :2 மார்ச் 2026, 8:46 pm

நாகப்பட்டினம்: மாசி மகத் திருவிழாவையொட்டி நாகை வெளிப்பாளையத்தில் உள்ள புகழ்பெற்ற அகத்தீஸ்வரா் உடனுறை ஆனந்தவல்லி தாயாா் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோயிலிலிருந்து சிவ வாத்தியங்கள் முழங்க அகத்தீஸ்வரா், ஆனந்தவல்லி தாயாா் தேருக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து தேரை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் ராணி மற்றும் பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். பக்தா்கள் அகத்தீஸ்வரா், ஆனந்தவல்லி தாயாருக்கு பூஜை செய்து ஆரூரா தியாகேசா என பக்தி பரவசத்துடன் தேரை தேரோடு வீதிகளில் இழுத்தனா்.