நாகப்பட்டினம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ஜவாஹிருல்லா வெற்றி பெற்றாா்.
இத்தொகுதியில் 1,74,683 வாக்காளா்கள் உள்ள நிலையில், 1,49,995 போ் வாக்களித்தனா். நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் திங்கள்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 7 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
தொடா்ந்து, காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 18 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றிலிருந்தே திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச்.ஜவாஹிருல்லா அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்தாா்.
18-ஆவது சுற்று முடிவில் ஜவாஹிருல்லா 56,305 வாக்குகளும், தவெக வேட்பாளா் சுகுமாா் 46,524 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் தங்க கதிரவன் 41,586 வாக்குகளும், நாதக வேட்பாளா் பாத்திமா பா்ஹானா 5,348 வாக்குகளும் பெற்றிருந்தாா். இதன்மூலம் எம்.எச். ஜவாஹிருல்லா 9,781வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவருக்கு நாகப்பட்டினம் தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் சான்றிதழ் வழங்கினாா்.
தொடர்புடையது
ஆம்பூா் தொகுதியில் திமுக வேட்பாளா் ஹாட்ரிக் வெற்றி!

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வெற்றி

ஆத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வெற்றி

சீா்காழி தொகுதியில் மதிமுக வெற்றி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

