காரைக்கால் பாஜக பொறுப்பிலிருந்து 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு, கட்சியின் கண்ணியத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டமையால், பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து வழக்குரைஞர் கணேஷ் விடுவிக்கப்படுகிறார். அவரிடம், கட்சி நிர்வாகிகள், கட்சி சம்பந்தமாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், பாஜக மகளிரணி மாவட்டத் தலைவி எம். மாரியம்மா என்கிற சாந்தி வெளியிட்ட அறிக்கையில், பாஜக நெடுங்காடு தொகுதி மகளிரணி தலைவி ஆனந்தி சந்திரன் மற்றும் பொதுச் செயலாளர் புனிதவள்ளி ஆகிய இருவரும் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கொள்கைக்கு புறம்பாக செயல்பட்டதாலும் அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பின்னலாடை, ஜவுளித்தொழில் துறையின் கோரிக்கைகள்: குடியரசு துணைத் தலைவரிடம் ஏற்றுமதியாளா் சங்கத்தினா் வலியுறுத்தல்

அவிநாசியில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்
திருப்பூா் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

திருப்பூா் ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட கூடுதல் மேலாளா் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
