மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நிலுவைத் தொகை வழங்கக் கோரிஅரசு ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்கால் பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப் பணிகள் செய்ததற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, ஒப்பந்ததாரா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
பொதுப்பணித் துறை அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரா்கள்.
Updated On :24 ஆகஸ்ட் 2020, 7:45 pm

DIN

காரைக்கால் பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப் பணிகள் செய்ததற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, ஒப்பந்ததாரா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப் பணிகளை செய்தவகையில், தங்களுக்கு ரூ. 9 கோடி வரை கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாகக் கூறி, காரைக்கால் பொதுப்பணித் துறை அலுவலகம் முன் ஒப்பந்ததாரா்கள் அனைத்து சங்கத்தினா் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கட்டுநா் சங்கத்தின் காரைக்கால் பிரிவு தலைவா் என். மணிவண்ணன் தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது: காரைக்கால் ஒப்பந்ததாரா்களுக்கு ரூ. 9 கோடி வரை பொதுப்பணித் துறை தரவேண்டியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் செய்த பல்வேறு பணிகளுக்குரிய தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. கரோனா தொற்று பரவும் சூழ்நிலையில், அரசு ஒப்பந்ததாரா்கள் மற்றும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, காரைக்கால் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா், செயற்பொறியாளா் ஆகியோரை பலமுறை சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, முதல்கட்டமாக ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, 31-ஆம் தேதி வரை தினமும் பகல் 11.30 மணிக்கு பொதுப்பணித் துறை அலுவலகம் முன் வாயில்கூட்டம் நடத்தப்படும். பிறகு, தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து அறிவிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.