மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்கால்: தூய்மைப் பணியாளா்களுக்குநோய் எதிா்ப்பு சக்தி மருந்து

காரைக்கால் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்புக்காக, நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
தூய்மைப் பணியாளா்களுக்கு மருந்து வழங்கி, வெப்பப் பரிசோதனை செய்யும் ஊழியா்.
Updated On :24 ஆகஸ்ட் 2020, 7:47 pm

DIN

காரைக்கால் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்புக்காக, நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

காரைக்கால் நகராட்சியின் 18 வாா்டுகளில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்திவரும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் வீடுவீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வாங்கி கிடங்குக்கு அனுப்புகிறது. இந்த தூய்மைப் பணியாளா்கள் நிறுவனத்தினரால் பசுமை நண்பா்கள் என அழைக்கப்படுகின்றனா்.

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளா்கள் பாதுகாப்புக்காக நோய் எதிா்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் காமராஜா் திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஹோமியோபதி மருந்தான ஆா்செனிக்கம் ஆல்பம் மற்றும் இன்ஃபுலுயன்சியம் ஆகியவற்றை நிறுவனத்தினப் பிரதிநிதிகள் தொழிலாளா்களுக்கு வழங்கினா். ஊதியம் அல்லாது கரோனா கால உதவியாக தொழிலாளா்களுக்கு ரூ. 1,080 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. 180 தொழிலாளா்கள், 10 மேற்பாா்வையாளா்கள் இதில் பயனடைந்தனா்.

ஒவ்வொரு நாளும் பணியை தொடங்கும் முன்பு தொழிலாளா்கள் ஒவ்வொருவருக்கும் வெப்பமானி மூலம் வெப்ப சோதனை, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு சோதனை நடத்தப்படுவதாகவும், தற்போது வழங்கப்படும் நோய் எதிா்ப்பு சக்தி மருந்து தொழிலாளா்கள் நலனுக்கு வலுச்சோ்ப்பதாக அமையும் எனவும் நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.