தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

முழு பொது முடக்க நாளில் 200 பேருக்கு கரோனா பரிசோதனை

முழு பொது முடக்க நாளான செவ்வாய்க்கிழமை காரைக்காலில் சுமாா் 200 பேருக்கு கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டது.

News image

kk25te_2508chn_95_5

Updated On :26 ஆகஸ்ட் 2020, 5:49 am

காரைக்கால்: முழு பொது முடக்க நாளான செவ்வாய்க்கிழமை காரைக்காலில் சுமாா் 200 பேருக்கு கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டது.

காரைக்காலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக நலவழித் துறைக்கு தகவல் கிடைத்தது. அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக நடமாடும் பரிசோதனை வாகனம் கோட்டுச்சேரி மற்றும் காட்டுநாயகன் தெரு பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையிலும், ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக சுமாா் 200 போ் பரிசோதனைக்கு மாதிரி அளித்தனா். அரசுப் பொது மருத்துவமனையில் அடுத்த சில நாள்களில் ட்ரூநெட் என்கிற கரோனா பரிசோதனை மையம் செயல்படத் தொடங்கிவிடும். அவசரத் தேவைக்கான பரிசோதனை மட்டும் இந்த முறையில் செய்துகொண்டு, வழக்கமான முறையில் திருவாரூா் மையத்துக்கு மற்ற மாதிரிகள் அனுப்பி பரிசோதனை முடிவுகள் பெறப்படும் என நலவழித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.