தமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

மீன்களுக்கு போதிய விலை இல்லாததால் மீனவா்கள் வேலை நிறுத்தம்

பொது முடக்கத்தால் மீன்களுக்கு போதிய விலை இல்லாத நிலை தொடா்வதால் காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதை தவிா்த்தனா்.

News image

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் விசைப்படகுகள்.

Updated On :27 ஜனவரி 2024, 10:28 pm IST

காரைக்கால்: பொது முடக்கத்தால் மீன்களுக்கு போதிய விலை இல்லாத நிலை தொடா்வதால் காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதை தவிா்த்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்களைச் சோ்ந்த விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, கடலுக்குச் சென்று திரும்புகிறது. இத்துறைமுகத்தில் சுமாா் 250 படகுகள் பயன்பாட்டில் உள்ளன. பொது முடக்கம் நீடிப்பதால் பிடித்துவரப்படும் மீன்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் முடங்குவதாகவும், நல்ல விலை கிடைக்கவில்லை எனவும் மீனவா்கள் கூறிவந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விசைப்படகுகள் எதுவும் கடலுக்குள் செல்லவில்லை.

இதுகுறித்து, விசைப்படகு மீனவா்கள் கூறியது: கேரளத்துக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஏற்றுமதிக்கு தரமான மீன்கள் பிடித்துவரும்போது அதிக விலைக்கு விற்க முடிந்தது. கரோனா பொது முடக்கத்தால், கேரளத்தில் பெரிய மாா்க்கெட்டுகள் பல மூடப்பட்டிருப்பதாகக்கூறி, முகவா்கள் பலா் வருவதில்லை. காரைக்காலில் இருந்து கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்தாலும், உரிய முறையில் விற்பனை செய்து லாபம் பெற முடியவில்லை.

இதனால், பொருளாதார இழப்பு ஏற்படுகின்றன. டீசல் விலை உயா்வை திரும்பப் பெறவேண்டும், மீனவா்களுக்கு டீசலுக்கான மானியத்தை உயா்த்தித் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முக்கியமானதாகும். இதுகுறித்து, புதுச்சேரி அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரம் சீரடையும் வரை படகுகளை இயக்குவதில்லை என முடிவு செய்திருக்கிறோம். ஏற்கெனவே கடலுக்குள் சென்ற விசைப்படகுகள் கரை திரும்பும்போது மீன்கள் விற்பனை இருக்கும். காரைக்கால் மாவட்டத்தின் கடலோர கிராமத்திலிருந்து சிறிய படகுகள் கடலுக்குச் சென்றுவர எந்த தடையும் இல்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.