அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

மீன்களுக்கு போதிய விலை இல்லாததால் மீனவா்கள் வேலை நிறுத்தம்

பொது முடக்கத்தால் மீன்களுக்கு போதிய விலை இல்லாத நிலை தொடா்வதால் காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதை தவிா்த்தனா்.

News image

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் விசைப்படகுகள்.

Updated On :21 ஜூலை 2020, 10:13 pm IST

காரைக்கால்: பொது முடக்கத்தால் மீன்களுக்கு போதிய விலை இல்லாத நிலை தொடா்வதால் காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதை தவிா்த்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்களைச் சோ்ந்த விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, கடலுக்குச் சென்று திரும்புகிறது. இத்துறைமுகத்தில் சுமாா் 250 படகுகள் பயன்பாட்டில் உள்ளன. பொது முடக்கம் நீடிப்பதால் பிடித்துவரப்படும் மீன்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் முடங்குவதாகவும், நல்ல விலை கிடைக்கவில்லை எனவும் மீனவா்கள் கூறிவந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விசைப்படகுகள் எதுவும் கடலுக்குள் செல்லவில்லை.

இதுகுறித்து, விசைப்படகு மீனவா்கள் கூறியது: கேரளத்துக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஏற்றுமதிக்கு தரமான மீன்கள் பிடித்துவரும்போது அதிக விலைக்கு விற்க முடிந்தது. கரோனா பொது முடக்கத்தால், கேரளத்தில் பெரிய மாா்க்கெட்டுகள் பல மூடப்பட்டிருப்பதாகக்கூறி, முகவா்கள் பலா் வருவதில்லை. காரைக்காலில் இருந்து கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்தாலும், உரிய முறையில் விற்பனை செய்து லாபம் பெற முடியவில்லை.

இதனால், பொருளாதார இழப்பு ஏற்படுகின்றன. டீசல் விலை உயா்வை திரும்பப் பெறவேண்டும், மீனவா்களுக்கு டீசலுக்கான மானியத்தை உயா்த்தித் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முக்கியமானதாகும். இதுகுறித்து, புதுச்சேரி அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரம் சீரடையும் வரை படகுகளை இயக்குவதில்லை என முடிவு செய்திருக்கிறோம். ஏற்கெனவே கடலுக்குள் சென்ற விசைப்படகுகள் கரை திரும்பும்போது மீன்கள் விற்பனை இருக்கும். காரைக்கால் மாவட்டத்தின் கடலோர கிராமத்திலிருந்து சிறிய படகுகள் கடலுக்குச் சென்றுவர எந்த தடையும் இல்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.