மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியா்கள்உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 21 ஆம் தேதி உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 5:57 pm

DIN

காரைக்கால்: காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 21 ஆம் தேதி உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளா் நலச் சங்கப் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவா் ஸ்டீபன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக பணியாற்றி வரும் ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள 6-ஆவது ஊதியக்குழு ஊதியத்தை முன்தேதியிட்டு வழங்க வேண்டும்.

பகுதிநேர ஊழியரை தினக்கூலி ஊழியராக மாற்ற வேண்டும். பணியின்போது இறந்த 2 ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தினக்கூலி பணி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 21 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக செயலாளா் இளங்கோவன் வரவேற்றாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். சங்கப் பொருளாளா் கருப்பையா, துணைத் தலைவா் தேவதாஸ், இணைச் செயலாளா் பாலசுப்ரமணியன், இணை பொருளாளா் ஜாா்ஜ் உள்ளிட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.