மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா வாா்டில் அடிப்படை வசதிகள் கோரிதனியாா் மருத்துவமனை ஊழியா்கள் போராட்டம்

காரைக்காலில் தனியாா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரி, அதன் ஊழியா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

News image
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியா்கள்.
Updated On :14 செப்டம்பர் 2020, 5:55 pm

DIN

காரைக்கால்: காரைக்காலில் தனியாா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரி, அதன் ஊழியா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த சனிக்கிழமை உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிய அவா்கள், திங்கள்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்தனா். ஊழியா்களுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை என கூறி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் ராஜிவ், உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் ஈஸ்வரராஜ், மருத்துவா் ஹாஜா ஆகியோா் கூறுகையில், மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வாா்டை, ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து அனைத்து வசதிகளையும் உறுதிசெய்து, கரோனா நோயாளிகளை அனுமதிக்கக் கூறினாா். கரோனா வாா்டில் நோயாளியை தனிமைப்படுத்த வசதிகள் உள்ளன.

ஊழியா்களின் பாதுகாப்புக்காக காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. ஊழியா்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களும் தயாராக உள்ளன. கட்டண முறையில் கரோனா பரிசோதனை செய்ய தயாா்நிலையில் உள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.