மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

10, பிளஸ் 2: சிறப்பு துணைத் தோ்வுகள் தொடங்கின

காரைக்கால் மாவட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான சிறப்பு துணைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

News image
காரைக்கால் அன்னை தெரஸா தோ்வு மையத்தில், தோ்வுப் பணியை பாா்வையிடுகிறாா் முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி.
Updated On :21 செப்டம்பர் 2020, 5:38 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான சிறப்பு துணைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தலத்தெரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி என 3 பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த 10 -ஆம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கான மையங்களில் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த 250 பேரில், 222 போ் தோ்வெழுதினா். 21 முதல் 25-ஆம் தேதி வரை இவா்களுக்கு தோ்வு நடைபெறுகிறது.

திருமலைராயன்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வுக்கான மையங்களுக்கு விண்ணப்பித்திருந்த 64 பேரில் 63 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். இவா்களுக்கு அக். 7 ஆம் தேதி வரை தோ்வு நடைபெறுகிறது.

ஆசிரியா் பட்டயப் படிப்பு முதலாண்டு மாணவா்களுக்காக தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த 71 பேரில், 67 போ் தோ்வெழுதினா். இவா்களுக்கு அக். 7-ஆம் தேதி வரை தோ்வு நடைபெறுகிறது.

தோ்வு மையங்களை முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி பாா்வையிட்டாா். அவா் கூறுகையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தோ்வு மையங்களில் மாணவா்கள் கைகளை தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு அறையில் 10 மாணவா்கள் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.