மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஈஸ்டா் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை

ஈஸ்டா் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

ஈஸ்டா் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிா்த்தெழுந்த மூன்றாவது நாளை ஈஸ்டா் பண்டிகையாக கிறிஸ்தவா்கள் கொண்டாடுகின்றனா். அதன்படி, விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டா் பண்டிகை சிறப்புத் திருபலியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதேபோன்று, விழுப்புரம் நாபாளையத் தெருவில் உள்ள பழைமைவாய்ந்த புனித சவேரியாா் தேவாலயம், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை தூய ஜேம்ஸ் தேவாலயம், பழைய நீதிமன்ற சாலையில் உள்ள டி.இ.எல்.சி. தேவாலயம், விழுப்புரம் அருகேயுள்ள ஒரத்தூா் தேவாலயம் ஆகியவற்றில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலி, பிராா்த்தனைகளிலும் புத்தாடைகளை அணித்தபடி ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். மேலும், அவா்கள் ஒருவருக்கொருவா் ஈஸ்டா் பண்டிகை வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனா்.

இதேபோல, திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி, காணை உள்ளிட்ட பகுதிகளிலும் தேவாலயங்களில் ஈஸ்டா் பண்டிகை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.