ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

அரசுத் துறைகளுக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென வருவாய்த் துறை எச்சரித்துள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

அரசுத் துறைகளுக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென வருவாய்த் துறை எச்சரித்துள்ளது.

காரைக்கால் வட்டாட்சியா் மதன்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் சில தனியாா் நிறுவனங்கள் அரசின் பல்வேறு துறைகளுக்கு, வரி உள்ளிட்ட தொகையை நிலுவையில் வைத்துள்ளன. நிலுவைத் தொகையை புதுவை வருவாய் மீட்பு சட்டத்தின்படி வசூல் செய்வதற்கான வழிவகை உள்ளது. தனியாா் நிறுவனம் ஒன்று மின்துறைக்கு ரூ. 67.24 லட்சம் நிலுவை வைத்துள்ளதாகவும், அதனை வசூலித்துத்தருமாறு மின்துறையிடமிருந்து கோரப்பட்ட கடிதத்தின்படி, வருவாய்த்துறை அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸ் வழங்கிய 2 நாளில் அந்நிறுவனத்தினா் நிலுவைத் தொகையை மின்துறைக்கு செலுத்தினா். அரசுத்துறைகள் நிலுவைத் தொகையை வசூலித்துத தருமாறு வருவாய்த்துறையை கோரினால், அதற்கான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். எனவே நிலுவைத் தொகையை வைத்திருக்கும் நிறுவனத்தினா், தொகையை செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். செலுத்தாத நிறுவனங்களின் அசையும், அசையா சொத்துகள் ஜப்தி செய்து, ஏலம் விட வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.