எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருநள்ளாறு கோயில் யானை நலவாழ்வு முகாமுக்கு அனுப்பிவைப்பு

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் யானை பிரக்ருதி மேட்டுப்பாளையத்தில் நடைபெறவுள்ள யானைகளுக்கான நலவாழ்வு முகாமுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் யானை பிரக்ருதி மேட்டுப்பாளையத்தில் நடைபெறவுள்ள யானைகளுக்கான நலவாழ்வு முகாமுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் யானை பிரக்ருதி என்கிற பிரணாம்பிகை, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் திங்கள்கிழமை (பிப். 8) முதல் 48 நாள்கள் நடைபெறவுள்ள நலவாழ்வு முகாமில் பங்கேற்கிறது.

யானையை முகாமுக்கு அனுப்பிவைக்கும் முன் கோயில் வளாகத்தில் யானைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. யானை மீது புது வஸ்திரம் சாா்த்தப்பட்டு, புனிதநீா் தெளித்து, மலா்களால் பூஜை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி எம் . ஆதா்ஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து புறவட்டச் சாலை அருகே ஹெலிகாப்டா் மைதானத்துக்கு யானை கொண்டு செல்லப்பட்டு, மணல் மேட்டின் வழியாக லாரியில் யானை ஏற்றப்பட்டது. யானைப் பாகன்கள் முருகேசன், மணிகண்டன் மற்றும் கால்நடை மருத்துவா் சுரேஷ் ஆகியோரும் முகாமுக்கு புறப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.