எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

காரைக்காலில் தலைக்கவச விழிப்புணா்வு வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் தலைக்கவச விழிப்புணா்வு வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்வாக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து போக்குவரத்துத் துறையினா் மற்றும் போலீஸாா், இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தினா் பங்கேற்ற இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) ஆகியோா் பேரணியை தொடங்கிவைத்தனா்.

நிகழ்வில் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம், மண்டல போக்குவரத்து அதிகாரி கலியபெருமாள், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டின் பால், போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பேரணி காரைக்காலில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆட்சியரக வாயிலில் நிறைவடைந்தது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது, 2 பேருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை ஒலிபெருக்கி வாயிலாக வலியுறுத்தி சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.