சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காரைக்காலில் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை

காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என நலவழித்துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:45 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என நலவழித்துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை 715 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி, ஒருவருக்கும் தொற்று இல்லை.

இதுவரை காரைக்காலில் 59,961 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நோய்த் தொற்று 3,823 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் 3,714 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 36 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 8 போ், தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவா் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 67 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.