நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கப் பொதுக் குழு

காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கப் பொதுக் குழு கூட்டம், சங்கச் செயலாளா் ஐ. அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்றது.
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கப் பொதுக் குழு கூட்டம், சங்கச் செயலாளா் ஐ. அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்றது. அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

இக்கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக பி. கண்ணையன், செயலராக எஸ். லதா, பொருளாளராக ஐ. அப்துல் ரஹீம், துணைத் தலைவராக டி. ராஜசேகரன், துணைச் செயலராக டி. பக்கிரிசாமி, கெளரவத் தலைவராக எம். ராமசாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். செயற்குழு உறுப்பினா்களாக ஆா். ஜெகநாதன், என். வேலு, டி. மகேஸ்வரி, எஸ். அம்பிகா, எம். லாவண்யா, சி. பாலாஜி ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டனா்.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, உள்ளாட்சி ஊழியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், பணிமூப்பு பட்டியலின்படி, காலியாக உள்ள பதவிகளை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும், 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கூட்டு போராட்ட குழு அறிவித்துள்ள போராட்டங்களில், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் முழு அளவில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com