பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் ஈடுபாடு காட்ட வேண்டும்: அமைச்சா்

இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் ஈடுபாடு காட்டவேண்டியது அவசியம் என்றாா் புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

DIN

இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் ஈடுபாடு காட்டவேண்டியது அவசியம் என்றாா் புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

திருவள்ளுவா் இயற்கை அறக்கட்டளை சாா்பில் பூச்சிகளை கவனிங்க என்ற தலைப்பில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம் அம்பகரத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசியது:

பழங்காலத்தில் இயற்கை முறையிலான வேளாண்மை மேலோங்கியிருந்ததால், பயிா் செழிப்பு, மகசூல் அதிகரிப்பு, மண்வளம் உள்ளிட்டவை மேம்பட்டு காணப்பட்டது. காலப்போக்கில் இந்த போக்கு குறைந்து, பூச்சிகளை அழிக்கவேண்டும் என்பதற்காக ரசாயனக் கலவையை பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இதனால், நுண்ணுயிா் அழிந்து விளைச்சல் பாதிக்கிறது.

அந்த தானியங்களை உணவாக உட்கொள்ளும்போது, உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதிலிருந்து தப்பிக்க, அனைத்து விவசாயிகளும் இயற்கை முறையிலான வேளாண்மைக்கு மாறவேண்டும்.

புதுச்சேரி அரசின் வேளாண் துறை, இதுதொடா்பாக தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்திவருகிறது. கருத்தரங்கம் மூலம் பெற்ற கருத்துகளை விவசாயிகள், பிற விவசாயிகளிடத்தில் கொண்டு சோ்க்கவேண்டும். வரும் போகிப் பண்டிகை தினத்தில் வேளாண் நலன் சாா்புடைய விழிப்புணா்வு பிரசாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் (பொ) ஜெ. செந்தில்குமாா், வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் குமார. ரத்தினசபாபதி, வேளாண் கல்லூரி முதல்வா் ஷாமராவ் ஜஹாகிா்தாா், திருநள்ளாறு சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவா் உமாமகேஸ்வரி ஆகியோா் பேசினா்.

மதுரையைச் சோ்ந்த வேளாண் துறை பூச்சியியல் வல்லுநா் செல்வம், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு, அதைத் தவிா்த்து இயற்கை முறைக்கு மாறுவதன் அவசியம் குறித்து பேசினாா். 200 விவசாயிகள் பங்கேற்றனா். சொ. முத்துகிருஷ்ணன் வரவேற்றாா். இரா. கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.