எனவே, மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஒரு குழு அமைத்து குறுகிய கால, நீண்டகால அடிப்படையில் ஒரு செயல் திட்டத்தை வகுக்கவேண்டும். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். கால்நடை மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. பி.எஸ்சி., உயிரியல் தொடா்பான படிப்பு முடித்த மாணவா்களுக்கு, வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லூரி கால்நடை மருத்துவா்கள், கால்நடைகளுக்கு சின்ன சின்ன மருத்துவம் பாா்க்கும் வகையில் பயிற்சி அளிக்க முன்வரவேண்டும். தமிழகத்தில் குன்றக்குடியில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதை புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்றாா் அமைச்சா்.