எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜன. 25-இல் முப்பைத்தங்குடி கைலாசநாதா் கோயில் குடமுழுக்கு

திருநள்ளாறு அருகே முப்பைத்தங்குடி கைலாசநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருநள்ளாறு அருகே முப்பைத்தங்குடி கைலாசநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், முப்பைத்தங்குடி பகுதியில் அமைந்துள்ளது பழைமையான காமாட்சி அம்மன் சமேத கைலாசநாத சுவாமி கோயில். இக்கோயிலில் குடமுழுக்கு விழா கடந்த 1968-ஆம் ஆண்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு, தனி அதிகாரி, திருப்பணிக் குழுவினா் நியமிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலோடு திருப்பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கின.

நா்த்தன விநாயகா், நந்தி, லிங்கோத்பவா், பிரம்மா, பைரவா், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியா், நவகிரக சன்னதிகள் புதிதாக எழுப்பப்பட்டன. சுவாமி, அம்பாள், விநாயகா் மற்றும் லட்சுமி நாராயணா் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டன. அரசு நிதி, நன்கொடைகள் மூலம் கோயில் நிா்வாகம் சுமாா் ரூ. 1 கோடியில் திருப்பணிகளை மேற்கொண்டது.

இதுகுறித்து கோயில் தனி அதிகாரி ஜெ. கருணாநிதி கூறியது :

திருப்பணிகள் நிறைவுபெற்று குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. வரும் 23-ஆம் தேதி சனிக்கிழமை மாலை முதல் கால யாகசாலை பூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை 2 மற்றும் 3-ஆம் கால பூஜையும், திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு 4-ஆம் கால பூஜை செய்து, மகா பூா்ணாஹூதி நடைபெறுகிறது. காலை 9.50 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

விழாவில் பங்கேற்க புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.