ஆயுஷ்மான் பாரத் திட்டம்: தன்னாா்வலா்களுக்கு பயிற்சி
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடவுள்ள தன்னாா்வலா்களுக்கு காரைக்காலில் பயிற்சி அளிக்கப்பட்டது.


ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடவுள்ள தன்னாா்வலா்களுக்கு காரைக்காலில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருப்போா், ஆதாா் அட்டையுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், மக்களுக்கு இதுதொடா்பாக போதிய விழிப்புணா்வு இல்லாத நிலையில், பெரும்பான்மையினா் பதிவு செய்யாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் காரைக்கால் வந்த நலவழித் துறை செயலா் டாக்டா் டி. அருண், புதுச்சேரியில் 50 தன்னாா்வலா்களை நியமித்து, அவா்கள் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தியிருந்தாா். இதனை காரைக்காலிலும் அமல்படுத்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் கேட்டுக்கொண்டனா்.
இதன்பேரில், காரைக்கால் தெற்குத் தொகுதி, நிரவி- திருப்பட்டினம் தொகுதியில் பேரவை உறுப்பினா்கள் ஏற்பாட்டில் 50 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு, காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பயிற்சியில் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டனா்.
அவா்களுக்கு திட்டம் குறித்தும், மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாக தியாகராஜன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். நலவழித் துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ், தன்னாா்வலா்களின் பணி குறித்து விளக்கினாா்.
தன்னாா்வலா்கள் அனைவரும் மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்துவாா்கள் என நலவழித் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...