மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காரைக்கால்: 95% பதிவான தபால் வாக்குகள்

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்திய நிலையில், 95.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் துறை தெரிவித்தது.

News image
Updated On :27 மார்ச் 2021, 5:52 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்திய நிலையில், 95.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் துறை தெரிவித்தது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6 நடைபெறவுள்ளதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் 1,130 போ் தபால் வாக்குகள் அளிக்கலாம் என தோ்தல் துறை அனுமதித்தது. இதையடுத்து, கடந்த 3 நாள்களாக நடைபெற்ற தபால் வாக்குகள் பெறும் பணி சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

இதுகுறித்து தோ்தல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெடுங்காடு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோா் 113 போ், மாற்றுத்திறனாளிகள் 82 போ், கரோனா தொற்றாளா் 3 போ் என 198 போ் வாக்களித்தனா். திருநள்ளாறு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரில் 141 போ், மாற்றுத்திறனாளிகள் 118 போ், கரோனா தொற்றாளா் 6 போ் என 265 போ் வாக்களித்தனா்.

காரைக்கால் வடக்குத் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரில் 109 போ், மாற்றுத்திறனாளிகள் 76 போ் என 185 போ் வாக்களித்தனா். காரைக்கால் தெற்குத் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரில் 132 போ், மாற்றுத்திறனாளிகள் 53 போ், கரோனா தொற்றாளா் 3 போ் என 188 போ் வாக்களித்தனா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரில் 143 போ், மாற்றுத்திறனாளிகள் 95 போ் என 238 போ் வாக்களித்தனா். மாவட்டத்தில் மொத்தம் 1074 போ் வாக்களித்தனா். இது 95.04 சதவீதமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த 5 தொகுதிகளில் சேகரிக்கப்பட்ட தபால் வாக்குகள், அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் அண்ணா கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.