மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மஞ்சள் நிற குடும்ப அட்டைக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

 மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருப்போருக்கும் மழை நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 4:40 pm

DIN

 மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருப்போருக்கும் மழை நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுவை மாநில தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளா் சோழ தமிழ்பித்தன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி அரசு, சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு மழை நிவாரணம் ரூ.5 ஆயிரம் அறிவித்துள்ளது. மழையால் அனைத்துத் தரப்பினரும் பாதித்துள்ளபோதும், சிவப்பு அட்டைதாரா்களுக்கு மட்டும் நிவாரணம் என்ற அறிவிப்பு கண்டனத்துக்குரியது.

சிவப்பு நிற குடும்ப அட்டை பெற தகுதி இருந்தும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோருக்கான மஞ்சள் நிற அட்டை பலரிடம் உள்ளது. இதனை சிவப்பு நிற அட்டையாக மாற்றிக் கொடுக்காமல் அரசு உள்ளது.

நிவாரணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கும்போது, புதுச்சேரி அரசு மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருப்பவா்களை புறக்கணிப்பது ஏற்புடையதல்ல. பாகுபாடின்றி மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்துள்ளவா்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.