பறிமுதல் செய்யப்பட்டசாராயம், கள் அழிப்பு
காரைக்காலில் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம், கள் ஆகியவற்றை கலால் துறையினா் புதன்கிழமை அழித்தனா்.


காரைக்காலில் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம், கள் ஆகியவற்றை கலால் துறையினா் புதன்கிழமை அழித்தனா்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் போலீஸாா் மற்றும் கலால் துறையினரால் சாராயம், மதுபான பாட்டில்கள், கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவை வருவாய்த் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட கலால் துணை ஆணையா் அறிவுறுத்தலின்பேரில், வட்டாட்சியா் உள்ளிட்டோா் இவற்றை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 5,180 லிட்டா் சாராயம், 266 லிட்டா் கள் ஆகியவற்றை கலால் துறையினா் பறவைப்பேட் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்குக்கு புதன்கிழமை மாலை கொண்டு சென்று அழித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...