திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காரைக்காலில் காங்கிரஸாா் பாதயாத்திரை

மத்திய அரசின் மக்கள்விரோத கொள்களை கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை நடைபெற்றது.

News image
பாதயாத்திரையில் பங்கேற்ற முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி, பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:32 pm

DIN

மத்திய அரசின் மக்கள்விரோத கொள்களை கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை நடைபெற்றது.

அத்தியாவசிய பொருள்கள் விலை உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாா்ப்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து, மாவட்ட காங்கிரஸ் சாா்பில் இந்த பாதயாத்திரை நடைபெற்றது.

மேற்கு புறவழிச்சாலை தலத்தெரு பகுதியில் தொடங்கிய பாதயாத்திரைக்கு புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக புதுவை முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி கலந்துகொண்டு பாதயாத்திரையை தொடங்கிவைத்து பங்கேற்றாா். காமராஜா் சிலை அருகே யாத்திரை நிறைவடைந்தது. அப்போது செய்தியாளா்களிடம் வி. நாராயணசாமி கூறியது:

நரேந்திர மோடி அரசு தோ்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்பது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஆகிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறது, நாட்டில் 23 கோடி போ் வறுமையில் உள்ளனா், 25 கோடி போ் வேலையின்றி உள்ளனா். 2024-ஆம் ஆண்டு தோ்தலில் எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜக அரசை வீழ்த்த வேண்டும்.

புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. இடைத்தரகா்கள் அதிகரித்துவிட்டனா். இந்த ஆட்சியில் காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது. 10 ஆயிரம் பேருக்கு வேலை என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது. அவலமான ஆட்சியை ரங்கசாமி நடத்திவருகிறாா்.

புதுவையில் சூப்பா் முதல்வராக துணைநிலை ஆளுநா் செயல்படுகிறாா். பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறத்தர அவா் முயற்சிக்கவில்லை. முதல்வா் புதுதில்லி சென்று ஏமாற்றத்துடன் திரும்பினாா். பின்னா் வந்த ஒப்புதலில் கடந்த பட்ஜெட்டைக் காட்டிலும் ரூ.150 கோடி குறைவாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.