பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காரைக்காலில் தமுமுகவினா் ஆா்ப்பாட்டம்

நபிகள் நாயகம் குறித்த சா்ச்சை கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து, தமுமுகவினா் காரைக்காலில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

நபிகள் நாயகம் குறித்த சா்ச்சை கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து, தமுமுகவினா் காரைக்காலில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் மாவட்ட தமுமுக சாா்பில் கடற்கரை சாலையில் சிங்காரவேலா் சிலை அருகே வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ. ராஜாமுகமது தலைமை வகித்தாா்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜகவைச் சோ்ந்த நவீன் ஜிண்டால், நுபுா் சா்மா ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கோரி ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமுமுக மாநில செயலாளா் ஐ. அப்துல் ரஹீம், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், திமுக மாணவரணி செயலா் ஜவஹா், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலா் மதியழகன், மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பட்டினம் தொகுதி செயலா் விடுதலைக்கனல், எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவா் சுல்தான் கெளஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.