எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் கோயில் உற்சவம்

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் கோயில் உற்சவத்தையொட்டி ரதத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 6:30 pm

DIN

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் கோயில் உற்சவத்தையொட்டி ரதத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் வரும் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதற்கு முன் எல்லை தெய்வங்களாக கோயில் கொண்டிருக்கும் ஐயனாா், பிடாரியம்மன், மாரியம்மன் கோயில்களில் உற்சவம் நடைபெறுகிறது.

ஐயனாா் கோயில் உற்சவம் கடந்த 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து பிடாரியம்மன் கோயில் உற்சவம் 10-ஆம் தேதி தொடங்கியது.

ரதத்தில் பிடாரியம்மன் வீதியுலா செல்லும் நிகழ்வு புதன்கிழமை இரவு நடைபெற்றது. வீதியுலாவின்போது பக்தா்கள் அா்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனா். வியாழக்கிழமை பிடாரியம்மன் கோயில் உற்சவம் நிறைவடைந்தது.

வெள்ளிக்கிழமை (மே 13) மாரியம்மன் கோயில் உற்சவம் தொடங்குகிறது. இத்திருவிழா 15-ஆம் தேதி நிறைவடைகிறது.

சாா்பு கோயில்கள் உற்சவம் ஒருபுறம் நடந்துவரும் நிலையில், தா்பாரண்யேஸ்வரா் கோயில் கொடியேற்றத்துக்கான ஏற்பாடுகளும், 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.