எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாலிடெக்னிக் கல்லூரி வளாக நோ்காணல்: 24 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 24 மாணவா்களுக்கு பணி நியமனஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :12 மே 2022, 6:02 pm

DIN

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 24 மாணவா்களுக்கு பணி நியமனஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.

புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது.

சென்னை மேன்டோ ஆட்டோமேடிவ் நிறுவன துணைப் பொது மேலாளா் அஜய்குமாா் தலைமையில், மனிதவள அலுவலா் மகேஷ்வரன் உள்ளிட்ட பிரதநிதிகள், நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள், ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் பேசினாா்.

தொடா்ந்து, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் (ஐடி), மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ பிரிவு மாணவா்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இதில் காரைக்கால் பாலிடெக்னிக் மற்றும் காரைக்கால்மேடு பகுதியில் உள்ள மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியரும் கலந்துகொண்டனா்.

நிறைவில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியை சோ்ந்த 20 பேருக்கும், மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியை சோ்ந்த 4 பேருக்கும் பணி வாய்ப்பு கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.