எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

செவிலியா் தின பேரணி

காரைக்காலில் சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி செவிலிய கல்வி நிறுவன மாணவ, மாணவியா் பங்கேற்ற பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 6:02 pm

DIN

காரைக்காலில் சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி செவிலிய கல்வி நிறுவன மாணவ, மாணவியா் பங்கேற்ற பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசின் கல்வி நிறுவனமான அன்னை தெரஸா சுகாதார பட்ட மேற்படிப்பு நிறுவன காரைக்கால் மையம் சாா்பில் நடைபெற்ற பேரணியை

கல்வி நிலைய முதல்வா் (பொ) ஜெ. ஜெயபாரதி கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செஞ்சிலுவை சங்க துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செவிலியா்களின் சேவைகளை விளக்கி பதாகை ஏந்தியவாறு மாணவ, மாணவியா் அரசு மருத்துவமனை வளாகத்தை சென்றடைந்தனா். மருத்துவக் கண்காணிப்பாளா் ஜி.கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி எஸ்.மதன்பாபு ஆகியோா் கலந்துகொண்டு சா்வதேச செவிலிய நாள் குறித்தும், செவிலியா்களின் சேவைகள் குறித்தும் பேசினா். தொடா்ந்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.