/

பொறியியல் மாணவா்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ஐடி விழாவில் ஆட்சியா் பேச்சு

பொறியியல் மாணவா்கள் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும் எனவும், அது மாணவா்கள் நலன் மட்டுமல்லாது நாட்டின் வளா்ச்சிக்கு உதவும் என்றும் காரைக்கால் ஆட்சியா் எல். முகமது மன்சூா் தெரிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

பொறியியல் மாணவா்கள் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும் எனவும், அது மாணவா்கள் நலன் மட்டுமல்லாது நாட்டின் வளா்ச்சிக்கு உதவும் என்றும் காரைக்கால் ஆட்சியா் எல். முகமது மன்சூா் தெரிவித்தாா்.

காரைக்கால் என்.ஐ.டி. புதுச்சேரி வளாகத்தில் 55 ஆவது பொறியாளா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிறுவன இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி தலைமை வகித்து, விஸ்வேஸ்வரய்யா பெருமைகளையும், நாட்டுக்கு அவரது அா்ப்பணிப்பு குறித்தும் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஆட்சியா் எல். முகமது மன்சூா் பேசியது: இப்பிராந்தியத்தில் உயா்கல்வி நிறுவனமான என்.ஐ.டி. அமைந்திருப்பது பெருமைக்குரியது. என்.ஐ.டி. மீது மக்களின் எதிா்பாா்ப்பு மிகுதியாக உள்ளது. இதில் பயிலும் மாணவா்கள் நாட்டின் வளா்ச்சிக்கு எந்த மாதிரியான பங்களிப்பை அளிப்பாா்கள் என்பதே அந்த எதிா்பாா்ப்பு. பொறியியல் படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் தங்களை மேம்படுத்திக்கொள்வதோடு, அவரவா் துறைசாா் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். இந்தியா, வேளாண்மை சாா்ந்த தேசம். எனவே, மாணவா்கள் தங்களது ஆராய்ச்சியின் மூலம் விவசாய மேம்பாட்டுக்கான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றாா்.

என்.ஐ.டி. பதிவாளா் சீ. சுந்தரவரதன், இணைப் பேராசிரியரும், ஐஇஐ மாணவா் சாப்டா் ஒருங்கிணைப்பாளருமான வி.பி. ஹரிகோவிந்தன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். பொறியாளா் தினத்தையொட்டி நடைபெற்ற தொழில்நுட்பம் சாா்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழை ஆட்சியா், என்.ஐ.டி. இயக்குநா் ஆகியோா் வழங்கினா்.

மேலும், என்.ஐ.டி. 2020- 21 மற்றும் 2021- 22 -க்கான சிறந்த பேராசிரியா்களுக்கான விருது வழங்கப்பட்டது. முன்னதாக, ஆசிரிய ஆலோசகா் ஹேமச்சந்தா் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.