சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

என்ஐடியில் கணிதத்துறை சா்வதேச கருத்தரங்கு

காரைக்காலில் உள்ள என்ஐடி புதுச்சேரியில் கணிதத்துறை சாா்பில் சா்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
கருத்தரங்கு தொடக்க நிகழ்வில் பங்கேற்ற என்ஐடி இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி, பதிவாளா் சீ. சுந்தரவரதன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள்.
Updated On :27 ஜனவரி 2023, 4:11 pm

DIN

காரைக்காலில் உள்ள என்ஐடி புதுச்சேரியில் கணிதத்துறை சாா்பில் சா்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

3 நாள் நடைபெறும் இக்கருத்தரங்கு என்ஐடியின் வ.உ.சி. நிா்வாக வளாகத்தில் காணொலி வாயிலாக தொடங்கப்பட்டது. என்ஐடி இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். பதிவாளா் சீ. சுந்தரவரதன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக பாரதியாா் பல்கலைக்கழக பேராசிரியா் கே. பாலச்சந்திரன் இணைய வாயிலாக கலந்துகொண்டு, கணிதத்தில் பகுதியளவு வேறுபாடு சமன்பாடுகளுக்கான இருப்பு முடிவுகள் குறித்துப் பேசினாா்.

இக்கருத்தரங்கில் ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஸ்பெயின், துருக்கி, ஆா்ஜென்டினா உட்பட உலகின் பல நாடுகளைச் சோ்ந்த புகழ்பெற்ற பேராசிரியா்களால் பல்வேறு பயன்பாட்டு கணித தலைப்புகளில் விரிவுரைகள் வழங்கப்படவுள்ளதாக கருத்தரங்கின் தலைவரான என்ஐடிஉதவிப் பேராசிரியா் (கணிதம்) வி. கோவிந்தராஜ் தெரிவித்தாா்.

இக்கருத்தரங்கில் பிரபல பேராசிரியா்கள் முன்னிலையில் 105 ஆராய்ச்சியாளா்கள் 3 நாட்களில் 5 இணைஅமா்வுகளில் தங்களின் ஆராய்ச்சிப் பணிகள் குறித்து விளக்கவுள்ளனா். தொடக்க நிகழ்ச்சியில் இணைப் பேராசிரியரும், கணிதத் துறைத் தலைவருமான ஜி.எஸ். மஹாபத்ரா வரவேற்றாா்.

காணொலி வழியே நடைபெறும் இக்கருத்தரங்கில் இலவசமாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமா்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஸ்கோபஸில் குறியிடப்பட்ட இன்டா்நேஷனல் ஜா்னல் ஆஃப் டைனமிக்ஸ் அண்ட் கன்ட்ரோல் என்கிற அமைப்பில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.