காரைக்காலில் நாளை சந்தனக்கூடு ஊா்வலம்
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக சந்தனக்கூடு ஊா்வலம் சனிக்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது.


காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக சந்தனக்கூடு ஊா்வலம் சனிக்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது.
மஸ்தான் சாஹிப் வலியுல்லா 200-ஆம் ஆண்டு கந்தூரி விழா மாா்ச் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின் கண்ணாடி ரதம் ஊா்வலம் போல, சந்தனக்கூடு ஊா்வலம் முக்கியமானதாகும். சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஹலபு என்னும் போா்வை வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மின்சார சந்தனக்கூடு பள்ளிவாசல் பகுதியிலிருந்து புறப்பட்டு, பல்வேறு வீதிகளுக்குச் சென்றவாறு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தா்கா வந்தடைகிறது. பின்னா் ரவ்லா ஷரீபில் சந்தனம்பூசும் வைபவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா வக்ஃபு நிா்வாக சபையினா் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...