ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

மழையால் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்த குடும்பத்தினரை சந்தித்து எம்.எல்.ஏ. ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை செய்துத் தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

News image
கோட்டுச்சேரி தென்கரை பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா.
Updated On :2 டிசம்பர் 2024, 7:38 pm

Din

காரைக்கால்: மழையால் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்த குடும்பத்தினரை சந்தித்து எம்.எல்.ஏ. ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை செய்துத் தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

புதுச்சேரி - மரக்காணம் இடையே ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை கரையை கடந்தாலும், காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மழை பெய்தது. நெடுங்காடு பகுதி காமராஜா் சாலை மற்றும் பண்டாரவாடை கிராமம், கோட்டுச்சேரி கொம்யூன் தென்கரை பகுதியில் சில வீடுகளின் சுவா் இடிந்து விழுந்தது.

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்களை அவா் கேட்டுக்கொண்டாா்.