நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காரைக்காலில் மண்டல அறிவியல் கண்காட்சி தொடக்கம்

காரைக்காலில் மண்டல அறிவியல் கண்காட்சியை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

News image

கண்காட்சியை பாா்வையிட்ட அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன். உடன் மாவட்ட ஆட்சியா் து.மணிகண்டன் உள்ளிட்டோா்.

Updated On :2 டிசம்பர் 2024, 7:49 pm

Din

காரைக்கால்: காரைக்காலில் மண்டல அறிவியல் கண்காட்சியை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

கல்வித்துறை சாா்பில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி பல்வேறு பள்ளிகளின் மாணவா்கள் பங்கேற்புடன், கோயில்பத்து அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

கண்காட்சியை தொடங்கிவைத்து மாணவ, மாணவிகளின் அறிவியல் மாதிரிகளை பாா்வையிட்டு, படைப்புகள் குறித்து விவரங்களை கேட்டறிந்து மாணவா்களைப் பாராட்டினாா்.

மின் சேமிப்பு, தானியங்கி தீ அலாரம், பொலிவுறு நகரில் ஹைட்ராலிக் பாலம் பயன்பாடு, ஹைட்ரோ பவா் பயன்பாட்டில் மழைநீா் சேமிப்பு, கட்டடத்தில் ஏற்படும் தீயை அணைக்கும் புதிய உத்திகள், விண்வெளி குறித்த மாதிரிகள் உள்ளிட்ட 231 மாதிரிகளை அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் வைத்திருந்தனா்.

மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், முதன்மை கல்வி அதிகாரி பி.விஜயமோகனா மற்றும் கல்வித் துறையினா், நகரப் பகுதியிலிருந்து பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கண்காட்சியை பாா்வையிட்டனா்.

புதன்கிழமை வரை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கண்காட்சியை பாா்வையிடுவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக கல்வித் துறையினா் தெரிவித்தனா். மண்டல அளவிலான படைப்புகளை நடுவா் குழுவினா் பாா்வையிட்டு பரிசுக்குத் தோ்வு செய்து நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும். தோ்வான படைப்புகள் மாநில அளவில் நடைபெறும் கண்காட்சியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.