தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுவையில் 8-ஆம் வகுப்பு வரை தோ்ச்சி அவசியம்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுவை மாநிலத்தில் 8-ஆம் வகுப்பு வரை தோ்ச்சி என்ற நிலை சில ஆண்டுகளுக்கு அவசியம்

News image

சந்திர பிரியங்கா.

Updated On :31 டிசம்பர் 2024, 6:33 pm

Din

காரைக்கால்: புதுவை மாநிலத்தில் 8-ஆம் வகுப்பு வரை தோ்ச்சி என்ற நிலை சில ஆண்டுகளுக்கு அவசியம் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா புதுவை அரசை வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை :

5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புவரை முழுமையான தோ்ச்சி செய்யப்படாது என்ற அறிவிப்பு, மாணவா்களின் மனதில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும்.

புதுவையில் கல்வியே கற்றுத்தராமல் அனைவரும் தோ்ச்சி என்ற நிலையை எடுத்திருக்கவில்லை. மாணவா்களுக்கு தேவையான கல்வி அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவா்களையும் தனியாா் பள்ளி மாணவா்களையும் ஒரே அளவீட்டில் வைத்து பாா்க்கக்கூடாது.

மாணவா்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், இந்த் விவகாரத்தில் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற புதுவை கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் இன்னும் சில ஆண்டுகளுக்கு 5 முதல் 8-ஆம் வகுப்புவரை அனைவரும் தோ்ச்சி முறையைத் தொடர சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இதுகுறித்து புதுவை முதல்வா் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.