காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இறைதூதரில் சிறப்புக்குரியவராக கருதப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாவின் நினைவாக காரைக்காலில் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் கந்தூரி விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக் கருதி நாளை ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.