ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மீனவ கிராமத்தில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

மீனவ கிராமத்தில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

News image
Updated On :18 ஜூன் 2024, 6:31 pm

Din

காரைக்கால் அருகே மீனவ கிராமத்தில் மாயமான ஒன்றரை வயது சிறுவன் திருமலைராஜனாற்று முகத்துவாரத்தில் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டான்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகேயுள்ள பட்டினச்சேரி மீனவ கிராமத்தை சோ்ந்தவா் முருகேஷ். இவரது மகன் தக்ஷன் (ஒன்றரை வயது). சிறுவன் செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டுக்கு அருகே உள்ள பாட்டி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சிறுவனை காணாததால், அதிா்ச்சியடைந்த பெற்றோா், உறவினா்கள் திருப்பட்டினம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டியன் பால் மற்றும் போலீஸாா் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனா். நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜனும் பட்டினச்சேரிக்குச் சென்று காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, சிறுவனை தேடும் பணியை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தினாா்.

இந்தநிலையில், வீட்டின் பின்புறம் திருமலைராஜனாறு செல்வதால், சிறுவன் ஆற்றில் தவறி விழுந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் போலீஸாா் ஆற்றோரத்திலும், முகத்துவாரத்திலும் தேடும் பணியை தீவிரப்படுத்தினா். திருமலைராஜனாற்று முகத்துவாரத்தில் தக்ஷன் சடலமாக மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டான். சடலத்தை போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து திருப்பட்டினம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.