பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை கொடியேற்றம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை கொடியேற்றம்

News image
Updated On :3 மே 2024, 6:30 pm

Din

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சனீஸ்வர பகவான் தனி சந்நிதிகொண்டு அருள்பாலிக்கிறாா். இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு பிரம்மோற்சவ விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கமாக, வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, ஆச்சாா்யவா்ணம் ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை கோயிலில் ஆதிகணபதி, சொா்ணகணபதி வீற்றிருக்கும் சந்நிதி முன் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பூா்ணாஹூதி நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் கோயில் யானை பிரணாம்பிகைக்கு பூஜை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து முறைப்படி திருவிழா தொடங்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கோயில் கொடிக் கம்பத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்படவுள்ளது.